அறிமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி, நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கும்பகோணத்தில் நடந்து வருகிறது. இதில் முக்கியமான வேடத்தில் ஷெரின் நடித்துள்ளார். படத்துக்கு திருப்புமுனையாக அமையும் கதாபாத்திரம் அவருடையது என்று ஜெகதீஷ் கூறியுள்ளார்.