நண்பர்களை காதலர்களாக்கியது பத்தி‌ரிகைகள்தான்

திங்கள், 26 மே 2014 (18:09 IST)
அமலா பால் திருமணத்துக்குப் பிறகு நடிப்பாரா மாட்டாரா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்று தனது வருங்கால கணவருடன் பத்தி‌ரிகையாளர் சந்திப்புக்கு வந்த அமலா பால் பதிலளித்தார்.
இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் காதலிக்கிறார்கள் என்று எழுதிய போதெல்லாம், நாங்க நல்ல நண்பர்கள் மட்டுமே என்று கூறி வந்தவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். திருமணத்தை முன்னிட்டு ஜோடியாக இன்று விஜய்யும், அமலா பாலும் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தனர்.
 

அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமலா பால், நல்ல கதைகள் அமைந்தால் திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் என்றார்.
காதல் குறித்து பேசிய விஜய், ஆரம்பத்தில் நானும் அமலா பாலும் நண்பர்களாகதான் பழகினோம். எங்களுக்குள் ஆரம்பத்தில் காதல் இல்லை. பத்தி‌ரிகைகளில் எங்களுக்குள் காதல் என்று கிசுகிசு வர ஆரம்பித்த பிறகே காதலிக்க ஆரம்பித்தோம் என்றார்.
 
அப்படியானால், மைனா படத்தில் அமலா பாலை பார்த்ததுமே மனசுக்குள் மணி அடித்தது என்று சொன்னதெல்லாம்...?

வெப்துனியாவைப் படிக்கவும்