ப்ரியாமணி நடித்த பருத்தி வீரன் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்தாலும் அதில் பெரிதும் சந்தோஷம் அடையாமல் இருந்து வந்தார்.
காரணம் தன் அழகான முகத்தை டல் மேக்கப் போட்டு கருப்பாக்கி தன் வசீகரத்தையே கெடுத்துவிட்டார் என புலம்பித் தீர்த்தார் ப்ரியாமணி. அப்போது, அதுபோன்ற கேரக்டரில் நடிக்கவும் மாட்டேன் என்று அறிக்கையும் விட்டார். அதன்பின் ஒன்றிரண்டு கிளாமர் வேடத்திலும் நடித்தார்.
தற்போது தெலுங்கில் இன்னும் ஒரு படி மேலே சென்று கவர்ச்சியாக நடித்தும் எடுபடவில்லை. அதனால் மீண்டும் தமிழகத்திற்கு வந்து தெரிந்த இயக்குனர்களிடம் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் முத்தழகு கேரக்டர் போல கேரக்டர் இருந்தால் சொல்லுங்கள் என தூது விட்டுக் கொண்டிருக்கிறார்.