ரவிக்குமார் இயக்கி நடித்த உண்மை படத்தில் சுஜிபாலா ஹீரோயினாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது என்பது ரவிக்குமார் சொல்லும் கதை. திருமணம் முடிந்த பின் வீடு, தோட்டம் எல்லாம் சுஜிபாலாவுக்கு வாங்கித் தந்தேன். அனைத்தையும் பெற்றுக் கொண்டு கல்யாணமே நடக்கவில்லை என்கிறார் சுஜிபாலா என்று இப்போதும் சுஜிபாலா மீது குற்றஞ்சாட்டுகிறார்.
சுஜிபாலாவோ, எனக்கு யாருடனும் திருமணம் நடக்கவில்லை. ரவிக்குமார் எனக்கு வீடும் வாங்கித் தரவில்லை, தோட்டமும் தரவில்லை. முக்கியமாக அவரிடம் இதெல்லாம் வாங்க பணமேயில்லை. அப்படி இருந்தால் எடுத்தப் படத்தை முதலில் ரிலீஸ் செய்யட்டும் என்கிறார்.