மலையாள இயக்குனர் லோகிததாஸின் கஸ்தூரிமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் ஜெயமோகன். அவர் வசனம் எழுதிய அங்காடித்தெரு, நான் கடவுள், நீர்ப்பறவை படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. வசந்தபாலனின் காவியத்தலைவன், பாலாவின் தாரை தப்பட்டை படங்களுக்கும் அவர்தான் வசனம் எழுதியுள்ளார்.
ஆனால் இதுநாள்வரை இருவரும் இணைந்து பணிபுரியாமலே இருந்தனர். த்ரிஷ்யம் ரீமேக் அந்த குறையை போக்கியுள்ளது. இருவரும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். சென்னையில் எளிமையாக நடந்த இந்தப் படத்தின் பூஜையில் கமல், ஜீத்து ஜோசப்புடன் ஜெயமோகனும் கலந்து கொண்டார்.