தோல்வி பா‌தி‌ப்‌பி‌ல் இயக்குனர்

வெள்ளி, 23 மே 2014 (17:42 IST)
இதற்கு முன் எத்தனையோ வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் என்றாலும், தற்போதைய வெற்றி மட்டுமே பேசப் படுவதோடு, பட வாய்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இல்லை என்றால் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு போராட வேண்டியிருக்கும். 
 
பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் மணிரத்னம். கொஞ்ச காலமாக அவர் இயக்கிய கடல் படம் உட்பட தொடர்ந்து தோல்வியடைந்ததால், அடுத்த படம் இயக்க தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. 
 
சமீபத்தில் பிரபல தெலுங்கு ஹீரோக்களான நாகார்ஜுனா, மகேஷ் பாபு மற்றும் ஐஸ்வர்யாராயை வைத்து மிகப் பிரம்மாண்டமான படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், மகேஷ் பாபு ஏற்கனவே வேறு படங்களுக்கு கொடுத்த கால்ஷீட் தேதிகளால், மணிரத்னம் படத்துக்கு தேதி ஒதுக்க முடியாமல் போனது. 
 
இதையடுத்து சிரஞ்சீவியின் 150-வது படத்தை மணிரத்னம் இயக்குவதாக பேச்சு அடிபட, சிரஞ்சீவி வேண்டாமென மறுத்து விட்டாறாம். இதற்கெல்லாம் மணிரத்னத்தின் தொடர் தோல்விதான் காரணமாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்