மலையாள சினிமா என்றால் ஷகிலா, ஷகிலா என்றால் மலையாள சினிமா என கேரளாவின் திரையுலகம் மாற்றமடைந்ததை கண்டு எரிச்சலடைந்த மலையாள திரையுலகினரே ஷகிலாவை கேரளாவிலிருந்து துரத்தினர். அப்படி தமிழகத்தில் தஞ்சமடைந்தவர் காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகு கணவனை இழக்க நோரிடும் பெண் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், குழந்தையை வளர்க்க அவள் எதிர்கொள்ளும் சவால்களையும் ஷகிலாவே திரைக்கதை அமைத்து எழுதியுள்ளார். அந்தக் கதையைதான் அவர் தனது முதல் படமாக எடுக்க உள்ளார்.