ஸ்பெல் பவுண்ட் மற்றும் நட்சத்திரா அமைப்புகள் இணைந்து சென்னைத் தீவு திடலில் சினிமா கண்காட்சியை நடத்துகிறது. இன்று தொடங்கும் இந்த கண்காட்சி அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்தக் கண்காட்சியில் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன், தமிழின் முதல் பேசும் படம் முதல் இன்றைய தேதி வரை வெளியான அனைத்துப் படங்களின் பட்டியல் மற்றும் புகைப்படங்களை கொண்ட அரங்கை நிர்மாணித்துள்ளார். தமிழ் சினிமா குறித்த அனைத்து தகவல்களையும் இந்த அரங்கில் அறிந்து கொள்ளலாம்.
இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக தமிழின் முக்கியமான திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. தவிர சந்திரலேகா, சந்திரமுகி ஆகிய படங்களின் பிரமாண்ட அரங்குகளை அப்படியே இங்கு அமைத்துள்ளனர்.