தீபாவளிக்கு முன்பு வெளியாகும் யான்

செவ்வாய், 3 ஜூன் 2014 (13:01 IST)
இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவி.கே.சந்திரன் இயக்கும் முதல் படமான யான் தீபாவளிக்கு முன்பு திரைக்கு வரும் என உறுதி அளித்துள்ளார்.
யான் படப்பிடிப்பு ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. இந்தியாவில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் யானின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஜீவா, துளசி முக்கிய கதாபாத்திரமேற்றுள்ளனர்.
 
எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படம் குறித்த இன்றைய நிலவரத்தை ட்விட்டரில் அப்டேட் செய்துள்ளார் ரவி.கே.சந்திரன்.
 
யான் படத்தின் கிளைமாக்ஸ் பேட்ச் வொர்க் இரண்டு தினங்கள் நடத்தப்பட வேண்டும். இரண்டு பாடல் காட்சிகள் படமாக்க வேண்டும். இவை முடிந்தால் யான் படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிடும் என அதில் கூறியுள்ளார். மேலும் தீபாவளிக்கு முன் படம் திரைக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
யானுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்