திருமதி வாலி மரணம்

திங்கள், 14 செப்டம்பர் 2009 (18:01 IST)
கவிஞர் வாலியின் மனைவி மணி திலகம் சென்னையில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், இலக்கிய உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கவிஞர் வாலி தமிழ் திரையுலகில் மூன்று தலைமுறைகளை கடந்து நீடித்து வரும் பாடலாசி‌ரியர். முதல்வர் மு.கருணாநிதியின் கலையுலக நண்பர்களில் முக்கியமானவர்.

இவரது மனைவி மணி திலகம். சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் சென்னையில் அவரது இல்லத்தில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 70.

வெப்துனியாவைப் படிக்கவும்