திட்டமிட்டதற்கு முன்பே தொடங்கிய ரஜினியின் லிங்கா

புதன், 30 ஏப்ரல் 2014 (12:15 IST)
ரஜினியின் புதிய படம் லிங்கா திட்டமிட்டதற்கு முன்பே தொடங்கியது. மைசூரில் நடக்கும் லிங்காவின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி மைசூர் சென்றுள்ளார்.
கோச்சடையான் படத்துக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஜினியுடன் சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பு. படப்பிடிப்பு தொடாங்கும் முன்பே படத்தின் விநியோக உரிமையை ஈரோஸ் நிறுவனம் வாங்கியதாகவும் தகவல் வெளியானது.
 
லிங்காவின் முதல் ஷெட்யூல்ட் நடப்பது மைசூரில். மே 2 -ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றுதான் கூறியிருந்தனர். திட்டமிட்டதற்கு முன்பாகவே ரஜினியும், படக்குழுவும் மைசூர் சென்றுள்ளனர். படவேலைகள் ஏற்கனவே 
தொடங்கிவிட்டன.
 
ரஜினி சிவ பகதர். அருணாச்சலம் உள்பட பல படங்களில் சிவனின் பெயர்தாங்கி நடித்துள்ளார். கோச்சடையான்கூட சிவனின் பெயர்தான். லிங்கா சிவனை குறிக்கும் பெயர். ரஜினியின் இளைய பேரனின் (ஐஸ்வர்யா தனுஷின் இரண்டாவது மகன்) பெயரும் லிங்காதான்.
 
பொதுவாக படம் குறித்து அதில் நடிக்கும் நடிகரோ, இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரோதான் அறிவிப்பார்கள். மாறாக லிங்கா குறித்த தகவல்களை வெளியிட்டது ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்