மகத் மங்காத்தாவின் மூலம் பிரபலமானவர். தாப்ஸிக்காக மோகன்பாபுவின் மகனிடம் உதை வாங்கியதில் மேலும் பிரபலமானார். அவர் ஸோலோ ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்குதான் சிம்பு என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பெயரை வைக்க சிம்புவிடம் அனுமதி கேட்ட போது உடனே சம்மதித்தவர், ஒரு காட்சியில் கௌரவத் தோற்றத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டாராம்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்குப் படத்துக்கு பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் பெயரை வைத்துள்ளனர்.