தென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்தை பார்க்கும் சந்தாப்பம் நமக்கு அமையவில்லை.
வித்யாபாலனுக்கு தேசிய விருது வாங்கித் தந்த இந்தப் படத்தை தமிழில், தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிட்டிருந்தனர். படத்தின் வெற்றி, தேசிய விருதெல்லாம் திட்டத்தை மாற்றியிருக்கிறது. தமிழ், தெலுங்கில் படத்தை ரீமேக் செய்கிறார்களாம்.
இதற்காக பல நடிகைகளை பரிசீலனை செய்து இறுதியாக அனுஷ்காவை டிக் செய்திருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.