ஜோ‌க் அருவியில் ரஜினி, சோனாக்ஷி - இறுதிகட்ட பரபரப்பில் லிங்கா

திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (17:11 IST)
லிங்கா படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி சிமோகாவில் படமாகி வருகிறது. இதில் ரஜினி, சோனாக்ஷி சின்கா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
லிங்கா படத்தின் படப்பிடிப்பு மே 1 தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. வருகிற டிசம்பர் 12 -ம் தேதி ரஜினியின் பிறந்தநாளில் படத்தை வெளியிடுவதாக திட்டம்.
 
தற்போது படத்தின் கிளைமாக்ஸ் சிமோகா மாவட்டத்தில் உள்ள சாகர் பகுதியில் நடந்து வருகிறது. இங்குள்ள ஜோ‌க் அருவியில் ரஜினி, சோனாக்ஷி சம்பந்தப்பட்ட காட்சியை கே.எஸ்.ரவிக்குமார் படமாக்கினார். மேலும் லிங்கனமக்கி அணைப் பகுதிகளிலும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. மொத்தம் 21 தினங்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தப்படும் என பட யூனிட் தெரிவித்தது.
 
அருவி, அணை மட்டுமின்றி அருகேயுள்ள கார்கல் வனப்பகுதிகளிலும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. படப்பிடிப்பு நடப்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்