ஜோதி கிருஷ்ணா இயக்குகிற படம் ஓடுகிறதோ இல்லையோ, அவர் அறிமுகப்படுத்தும் நடிகைகள் ஓகோவென்று இருப்பார்கள் என்ற நம்பிக்கை தமிழ் சினிமாவில் பரவலாக இருக்கிறது.
அவர் அறிமுகப்படுத்திய ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். கேடியில் அறிமுகப்படுத்திய இலியானா தெலுங்கில் கொடி கட்டி பறக்கிறார். தமன்னா தமிழை கலக்குகிறார். இதனை இங்கு பட்டியலிட காரணம் இருக்கிறது.
ஜோதி கிடிருஷ்ணா முதல் முறையாக இயக்கி ஹீரோவாக நடிக்கும் ஊலலலா படத்தில் ப்ரீத்தி பண்டாரி என்ற அழகியை அறிமுகப்படுத்துகிறார். தமிழ் சினிமாவை கலங்கடிக்கும் சாமுத்ரிகா லட்சணங்கள் அனைத்தும் பண்டாரியிடம் கொட்டிக் கிடக்கிறது.
இப்போது விட்டால் பிறகு பிடிக்க முடியாது என்பதாலா தெரியவில்லை, கதைக்கு தேவையே இல்லாமல் ஒரு முத்தக் காட்சியை படத்தில் வைத்திருக்கிறார் ஜோதி கிருஷ்ணா. ஏண்ணா இப்படி என்று கேட்டால், சும்மா யூத்ஃபுல்லா இருக்கட்டுமேன்னுதான் என்று சதாய்க்கிறார்.
ம்... ஸ்ரேயா, தமன்னா, இலியானா ஏற்படுத்திய ஏக்கமாக இருக்கலாம்.