சரவணனின் இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. அடுத்து அவர் விக்ரமை வைத்து படம் செய்யப் போவதாகவும், விக்ரமிடம் கதை சொல்ல இருப்பதாகவும் பலமாக பேசப்பட்டது. இந்நிலையில் தனது முதல்பட ஹீரோ ஜெய்யை வைத்து அடுத்தப் படத்தை தொடங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் நடித்த அஞ்சலியே இந்தப் புதிய படத்திலும் நடிப்பார் என வதந்தி கிளம்பியது. ஆனால் அஞ்சலிக்குப் பதில் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்தார் சரவணன்.