அதனை தெரிந்து கொள்ள சில வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும்.
அப்போது ஜெயப்பிரகாஷ் தயாரிப்பாளர். அவரும் ஞானவேலும் (இவர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இல்லை. வேறு ஞானவேல்) இணைந்து படங்கள் தயாரித்து வந்தனர். குறிப்பாக விஜயகாந்தை வைத்து சில படங்கள் தயாரித்தனர். லாபம் இல்லை, நஷ்டம் கணிசம் என்ற நிலையில் சேரனின் வற்புறுத்துதலால் அவரது மாயக்கண்ணாடியில் நடித்தார் ஜெயப்பிரகாஷ். அது அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இன்று ஒரு நல்ல வேடம் இருந்தால் நேராக ஜெயப்பிரகாஷை தேடித்தான் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் செல்கிறார்கள்.
ஜெயப்பிரகாஷ் படங்கள் தயாரித்த கடந்தகாலத்தை மறந்துவிட்டாலும் அப்போதைய கடன் சமீபத்தில் விஸ்வரூபமெடுத்தது. கடன் முழுவதையும் என் தலையில் கட்டி அவர் ஒதுங்கிவிட்டார் என முன்னாள் பார்ட்னர் ஞானவேல் கொடுத்த புகாரின் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது. ஜெயப்பிரகாஷ் ஞானவேலுக்கு ஒன்றேகால் கோடி தர வேண்டும் என பஞ்சாயத்தானது. அதன் முதல்தவணையாக ஜெயப்பிரகாஷ் தந்த செக் பணமில்லை என திரும்பிவர, மீண்டும் பிரச்சனை ஆரம்பித்துள்ளது.