வடிவேலு, கஞ்சா கருப்பு, சந்தானம் என்று விவேக்குக்கு பிறகு நடிக்க வந்த காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோவாகிவிட்டனர். விவேக்கின் நாயக அவதாரம் மட்டும் இன்னும் நடந்தேறவில்லை. பஞ்சு என்ற பெயரில் ஒரு படம் தொடங்கி ஆரம்பித்த ஜோரில் ஊத்தி மூடியது. பிறகு சொல்லி அடிப்பேன் என்ற படம். படம் முடிந்தும் இன்னும் பெட்டிக்குள்ளிருந்து வெளிவர முடியவில்லை.
காமெடி நடிகர்கள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில்தான் ஹீரோவாகியிருக்கிறார்கள். அல்லது அவர்கள் ஹீரோவாகும் படம் பக்கா கமர்ஷியல் வஸ்துகள் நிறைந்ததாக இருக்கும். நான்தான் பாலா இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டிருக்கிறது. படத்தில் விவேக்கின் பிராமண கெட்டப்பும், படம் குறித்த செய்திகளும் படம் கொஞ்சம் சீரியஸ் என்ற நினைப்பையே தருகின்றன. காமெடி நடிகரின் சீரியஸ் படம் என்றால் வியாபாரம் படுத்துவிடும் என்பதால் நான்தான் பாலா முழுநீள கமர்ஷியல் படம் என்று விளம்பரமே தருகிறார்கள்.