அரண்மனை படம் முடிந்ததும் இரு படங்களை இயக்கப் போவதாகவும், அந்த இரண்டிலும் நான் நடிக்கப் போவதில்லை என்றும் சமீபத்திய பேட்டியில் கூறினார் சுந்தர். சி. அந்த இரண்டில் ஒன்று விஷால் நடிக்கும் படம். அதனை விஷாலே உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே இவர்கள் இணைந்து உருவாக்கிய மத கஜ ராஜா இன்னும் வெளியாகாமல் உள்ளது. தயாரிப்பாளரின் முந்தையப் படங்கள் ஏற்படுத்திய நஷ்டம் மத கஜ ராஜாவுக்கு வில்லனாக அமைய, ஒருகட்டத்தில் அந்த சுமையை தானே தாங்குவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினார் விஷால்.