இரண்டாம் உலகம் தோல்விக்குப் பிறகு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்வதில்லை, பிரமாண்ட படங்களை தற்சமயம் இயக்குவதில்லை என பல்வேறு தீர்மானங்கள் எடுத்தார் செல்வராகவன். குறைவான பட்ஜெட்டில் குறுகியகால தயாரிப்பில் படம் இயக்க வேண்டும் என்பதே இப்போது அவரது நோக்கம்.
செல்வராகவனின் புதிய படம் ஏப்ரல் 25 தொடங்குகிறது. சிம்பு நாயகனாக நடிக்கும் இதில் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு சிம்பு, த்ரிஷா ஜோடி திரையுலகின் வெற்றி ஜோடியாகிவிட்டது.