சென்னை திரும்பியது கோவா டீம்

வியாழன், 18 ஜூன் 2009 (16:12 IST)
வெங்கட்பிரபுவின் கோவா படத்தின் இரண்டாவது ஷெட்யூல்ட் முடிந்து சென்னை திரும்பியிருக்கிறது கோவா யூனிட்.

சௌந்தர்யா ர‌ஜினியின் ஆக்கர் ஸ்டுடியோ தயா‌ரிப்பில் கோவா படம் உருவாகி வருகிறது. வெங்கட்பிரபுவின் மூன்றாவது படமான இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு.

ஜெய், பிரேம்‌ஜி, வைபவ், அரவிந்த் என வெங்கட்பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள்தான் இதிலும். சுனேகா, பூஜா, ஹாலிவுட் நடிகை ஜூலியானா பைன் என மூன்று ஹீரோயின்கள். இதில் சினேகாவுக்கு நெகடிவ் கேரக்டர்.

தேனியில் கோவா படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவா சென்றவர்கள் ஜெய், பிரேம்‌ஜி மற்றும் வைபவ் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். மூன்றாம்கட்ட படப்பிடிப்பிடில் சினேகா, பூஜா, ஜுலியானா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

யுவன் ஷங்கர் ராஜஇசையமைக்கிறார். சக்தி சரவணன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்