இன்று (ஜூலை 23) சூர்யாவின் 39 ஆவது பிறந்தநாள். தனது பிறந்தநாளின் போது நற்பணிகள் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சூர்யா ரசிகர் மன்றத்தினர் அன்னதானம், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு பென்சில், ரத்ததானம் என பல்வேறு நற்பணிகள் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றத்தினர் சார்பில் மேடவாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தனர்.