சூர்யா பிறந்தநாள் - குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

புதன், 23 ஜூலை 2014 (17:24 IST)
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பிறந்த குழந்தைகளுக்கு சூர்யா ரசிகர்கள் தங்க மோதிரம் பரிசளித்தனர்.
 
இன்று (ஜூலை 23) சூர்யாவின் 39 ஆவது பிறந்தநாள். தனது பிறந்தநாளின் போது நற்பணிகள் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சூர்யா ரசிகர் மன்றத்தினர் அன்னதானம், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு பென்சில், ரத்ததானம் என பல்வேறு நற்பணிகள் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றத்தினர் சார்பில் மேடவாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தனர்.
 
அதேபோல் தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதேபோல் மத்திய சென்னை ரசிகர் மன்றத்தினரும் பள்ளி சிறுவர்களுக்கு பேக் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு மிக்சி என்று பல்வேறு உதவிகளை செய்தனர்.
 
இந்த நற்பணிகளின் போது மாவட்ட, மாநில மன்ற நிர்வாகிகள் உடனிருந்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்