சுந்தர். சி இயக்கத்தில் நடிக்கும் விஷால், ஹன்சிகா

வியாழன், 19 ஜூன் 2014 (11:25 IST)
சுந்தர். சி அடுத்து இயக்கும் படத்தில் விஷால், ஹன்சிகா நடிக்கின்றனர். இந்தத் தகவலை ஹன்சிகாவே உறுதி செய்துள்ளார்.
சுந்தர். சி யின் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் முதல்முதலாக நடித்தார் ஹன்சிகா. அந்தப் படத்தில் ஒன்றாக பணிபுரிந்த பிறகு ஹன்சிகாவுக்கு சுந்தர். சி யையும், சுந்தர். சி மற்றும் குஷ்புவுக்கு ஹன்சிகாவையும் பிடித்துப் போய்விட்டது. தனது அரண்மனை படத்திலும் ஹன்சிகாவுக்கு முக்கியமான வேடம் தந்துள்ளார் சுந்தர். சி. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதையடுத்து செப்டம்பரில் புதுப் படத்தை தொடங்குகிறார். விஷால் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சுந்தர். சியின் மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடித்த ஒரே நடிகை என்ற பெயர் கிடைத்திருக்கிறது.
 
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் வரலட்சுமி நடித்த மத கஜ ராஜா தயாரிப்பாளரின் கடன் சுமையால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அந்த காரணத்துக்காகவே மீண்டும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தனர். செப்டம்பரில் இருவரின் விருப்பமும் நிறைவேறப் போகிறது.
 
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்