இன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார் கமல்ஹாசனின் மகள் சுருதி ஹாசன்.
சினிமாவும், இசையும் எனது இரு கண்கள் எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் இசையமைப்பில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார் சுருதி ஹாசன்.
தற்போது தன் கைவசம் 5 படங்கள் உள்ளதாகவும் ஓய்வேயில்லாமல் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழில் '3' படத்திற்கு பிறகு ஆளையே காணும் என்று நினைக்கவேண்டாம். தெலுங்கில் அவர் பிசியாகியுள்ளார். குறிப்பாக கப்பர் சிங் படத்திற்குப் பிறகு தெலுங்கில் பிசி.
ரவிதேஜாவுடன் ‘பலுபு’ ராம்சரனுடன் ‘யவடு’ மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். இந்தியில் பிரபுதேவா இயக்கும் படமொன்றிலும் நடிக்கிறேன்.
இவ்வாறு கூறினார் பிறந்த நாள் மகிழ்ச்சியில் சுருதி ஹாசன்.