சினிமாவிலிருந்து விலகல் - திருமண ஆசையில் சமந்தா?

வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (11:28 IST)
சூர்யாவுடன் அஞ்சான், விஜய்யுடன் கத்தி, விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள... முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எந்த நடிகைக்கும் தோன்றாத எண்ணங்கள் சமந்தாவுக்கு தோன்றியுள்ளது. அதாவது, ரிட்டையர்ட்மெண்ட்.
முன்னணி நடிகையாக இருக்கும் இந்த நேரத்தில், இப்போதே சினிமாவைவிட்டு விலகினால் என்ன என்று எனக்கு தோன்றுகிறது என பேட்டியின் போது அவராகவே ஒரு பிட்டை தூக்கிப் போடுகிறார். 
 
சமந்தாவின் இந்த திடீர் சினிமா அதிருப்திக்கு காரணம், திருமண ஆசைதான் என்கிறார்கள். சித்தார்த்தும், சமந்தாவும் காதலிப்பது சம்பந்தப்பட்ட இருவர் தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்த ரகசியம். சமீபத்தில் நடந்த எனக்குள் ஒருவன் படவிழாவில் சம்பந்தமேயில்லாத சமந்தா கலந்துகொண்டு, எனக்குப் பிடித்த நடிகர் சித்தார்த் என்று மனதை கொட்டிக் கவிழ்த்தார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதால்தான் தனது ரிட்டையர்ட்மெண்ட் குறித்து சமந்தா பேச ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள்.
 
லாஜிக்கான சந்தேகம்... நம்பித்தான் ஆகணும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்