ரஜினி, மோகன்பாபு நட்பு நாடறிந்தது. இருவரும் வாடா போடா நண்பர்கள். ஹைதராபாத்தில் நடந்த கோச்சடையானின் தெலுங்குப் பதிப்பு விக்கிரமசிம்ஹா படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவை முன்னின்று நடத்தித் தந்ததும் மோகன்பாபுதான்.
அப்போது பேசிய அவர், எனது இரு மகன்களில் யாராவது ஒருவரை ரஜினியின் மகள்களில் ஒருவருக்கு மணமுடிக்க விரும்பியதாக தெரிவித்தார். தனது இந்த ஆசை லதா ரஜினிகாந்துக்கு தெரியும் என்றும், ஆனால் அது நடக்கவில்லை, அதனால்தான் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்கிறார்கள் என்று கூறினார்.