நீண்ட நாள்களுக்குப் பிறகு வெற்றியை ருசித்திருக்கிறார் பார்த்திபன். வெறும் வெற்றியல்ல, விமர்சகர்களும், ரசிகர்களும் ஒருசேர கொண்டாடும் வெற்றி. ஆனந்தத்தில் கண்ணீர் வருகிறது என்று பார்த்திபன் சொல்லாமலே நம்மால் உணர முடியும்.
இது பற்றி பார்த்திபன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
"முதல் படம் புதிய பாதை வெளியானதும் சபரிமலை சென்றுவிட்டேன். எல்லாம் ஆண்டவன் விட்டவழி என்று அவன் மீது பாரத்தை போட்டேன். அதன் பிறகு கதை, கருத்து என்று நான் செய்த படங்கள் வெற்றியை தரவில்லை. என்னுடைய கிப்ட் வித்தியாசமாக இருக்கிறது என்றார்களே தவிர என்னுடைய படத்தைப் பற்றி எதுவும் யாரும் சொல்வதில்லை.