குடியிருப்புவாசிகளுடன் மோதலில் இறங்கிய பவர் ஸ்டார்

திங்கள், 24 மார்ச் 2014 (15:18 IST)
FILE
படம் நடிக்காவிடினும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சமில்லை. மோசடி வழக்கில் சிறைப்பறவையான படாவதி ஸ்டார் சீனிவாசன் லேட்டஸ்டாக குடியிருப்புவாசிகள் மீது புகார் தந்துள்ளார்.

சென்னை மதுரவாயல் அருகே வானகரம் - அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் உள்ளது. இந்த‌க் குடியிருப்பில் சீனிவாசனுக்கு சொந்தமான லத்திகா ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட் இயங்கி வந்தது. தொடர் வழக்கில் சீனிவாசன் சிக்கிய பிறகு இந்த ஸ்டோர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் குடியிருப்புவாசிகள் தனது கடையின் கிரில் கேட்டை உடைத்து சுமார் ஐந்து லட்சங்கள் மதிப்பிலான பொருள்களை திருடிவிட்டதாக அவர் போலீஸில் புகார் தந்துள்ளார்.

குடியிருப்பு பகுதியை மறித்து சீனிவாசன் தனது கடைக்காக கிரில் கேட் போட்டதாகவும், அதனை மாற்ற டிசம்பர் வரை கெடு தந்திருந்ததாகவும், அதற்குள் கேட்டை அவர் மாற்றாததால் தாங்களே கேட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர்.

எந்த குடியிருப்பாக இருந்தாலும் அதில் சில பேர் குடியிருப்போர் நலச்சங்கம் என்ற பெயரில் நாட்டாமை செய்வதுண்டு. அப்படியொரு நாட்டாமையின் நடவடிக்கைதான் இந்த கிரில் அப்புறப்படுத்தல் என்று தெரிகிறது.

இரு தரப்பினர் தந்த புகார்கள் மீதும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்