குற்றம் செய்த ஒருவன் போலீஸிடமிருந்து தப்பிக்க அடர்ந்த காட்டுக்குள் அடைக்கலமாகிறான். காட்டில் ஒரு பங்களாவை கண்டடைகிறான். அதில் வசிக்கும் பெண்ணுடன் அவனுக்கு பழக்கமாகிறது. பழக்கம் காதலாகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். சாந்தி முகூர்த்தமும் நடக்கிறது. அதன் பிறகு அவள் காணாமல் போகிறாள். அவன் எவ்வளவு தேடியும் அவள் எங்கு போனாள் என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை.
விக்னேஷ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவிகா மாதவன், சந்திரிகா என்று இரு ஹீரோயின்கள். கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று நம்பிக்கையுடன் கூறினார் படத்தின் இயக்குனர்.