முன்னணி ஹீரோயினாக தமிழில் வளர்ந்து வருகிற நேரம் பார்த்து சொந்தமாகவே காணாமல் போனார் அஞ்சலி. அதில் பிடித்தது சனி. நமது படத்தில் நடிக்கும் போது காணமால் போனால் நம் படத்தோட கதி என்னாகிறது என்று தயாரிப்பாளர்களும், அவருடன் நடிக்கையில் காணாமல் போய் நம் பெயரை சந்தியில் இழுத்துவிட்டால் பத்திரிகைகள் சிந்து பாடிவிடுமே என்று நடிகர்களும் அச்சப்பட்ட காரணத்தால் அஞ்சலி என்றாலே அஞ்சாறு கிலோ மீட்டர் விலகிச் செல்ல ஆரம்பித்தனர் திரையுலகினர்.