காதல் கல்யாணம்தான் செய்துகொள்வேன் - மல்லிகா கபூர்

புதன், 8 ஜூலை 2009 (19:14 IST)
ஆர்.கே. பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் 'நேசிப்பதும் சுவாசிப்பதும்' என்ற திரைப்படம் தயாராகிக் கொண்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

மல்லிகா கபூர் நடிக்கும் இப்படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. படப்பிடிப்புக்கு பின்னர் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகா கபூர், நல்ல கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை எ‌ன்று கருப்பு வெள்ளை காலத்திலிருந்து கதாநாயகிகன் பேசிவரும் அதே டயலாக்கை அவிழ்த்துவிட்டார்.

கதைக்கு தேவையென்றால் நீச்சல் உடையும் தனக்கு ஓ.கே.தான் என்ற மல்லிகா, உங்கள் கல்யாணம் காதல் திருமணமாக இருக்குமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, நிச்சயமாக. நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவரைத்தான் திருமணம் செய்யப் போகிறேன் என்றார் கேஷுவலாக.

இந்த தைரியம் மத்த நாயகிகளுக்கும் வேண்டாமோ!

வெப்துனியாவைப் படிக்கவும்