சுதந்திரத்துக்கு முன்பு 1920களில் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் இயங்கி வந்த நாடக கம்பெனிகளின் பின்புலத்தில் காவியத்தலைவன் கதை சொல்லப்படுகிறது. நாடக கம்பெனிகள், அதில் நடிக்கும் நடிகர்கள் என இதுவரை தமிழ் சினிமா அறிந்திராத பகுதிகள். பழைய காலகட்டம் என்பதால் பழைய படங்களில் வருவது போல் இருபதைத் தொடும் குறும் பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் நடித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.