சாந்தகுமார் என்ற திறமையான இயக்குனரால் அருள்நிதியின் தோல்வி ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதனை மனதில் ஆழமாக பதிய வைத்துதான் அடுத்தடுத்த கதைகளைக் கேட்டார் அருள்நிதி. அவரை அசத்துவது போல் ஒரு கதையும் கிடைத்திருக்கிறது. சொன்னவர் கரு.பழனியப்பன்.
முதல் படத்துக்குப் பிறகு முற்றாக தோல்வியின் பக்கம் சாய்ந்த கரு.பழனியப்பன் நல்ல இயக்குனர் என்ற பெயரை மட்டும் எப்படியோ தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவர் அருள்நிதியை சந்தித்து சொன்ன கதை அருள்நிதிக்கு பிடித்திருக்கிறது. அப்புறமென்ன.. சொந்த பேனரில் படத்தை தயாரிப்பது என்று மார்ச்சில் ஷூட்டிங் போக தேதியும் ஃபிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள்.