சேலத்தைச் சேர்ந்தவர்களை பெரிய சினிமா கலாரசிகர்கள் என்பார்கள். அவர்களை பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள் போலிருக்கிறது தஞ்சாவூர்க்காரர்கள்.
கந்தா படத்தின் சில காட்சிகளை தஞ்சாவூரில் படமாக்கினார் இயக்குனர் பாபு கே.விஸ்வநாத். அவர் கேமரா வைத்த இடத்திலெல்லாம் மக்கள் வெள்ளம். ஹீரோ கரணை பார்க்க ஜனங்கள் முண்டியடித்ததைப் பார்த்து அவருக்கே நம்ப முடியாத ஆச்சரியம். நமக்கு இத்தனை ரசிகர்களா?
இதில் அதிசயம் என்னவென்றால், மாலை ஆறு மணிக்கு கூடிய ஜனம் நள்ளிரவு தாண்டியும் கலையாமல், உற்சாகம் குறையாமல் அப்படியே நின்றிருக்கிறது. நாலு நாள்தான் கால்ஷீட் என்று கறாராக கூறிய கரண், இந்த கிரவுடைப் பார்த்து கால்ஷீட்டை இரண்டு வாரத்துக்கு இழுத்திருக்கிறார். படப்பிடிப்பு நடந்த அத்தனை நாளும் முதல் நாள் கூட்டம் அப்படியே மெயின்டெயின் ஆகியிருக்கிறது.
தஞ்சாவூர் ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிய கரண், படத்தின் கிளைமாக்ஸை கண்டிப்பாக தஞ்சாவூரில்தான் வைக்க வேண்டும் என கண்டிஷன் போட்டிருக்கிறார். அவரது ஆசைக்கேற்ப கிளைமாக்ஸை தஞ்சாவூரில் எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர்.
கரணின் கனகவேல் காக்க படத்துக்குப் பிறகு கந்தா வெளியாகிறது.