கமல் தொடங்கும் பத்தி‌ரிகை

வியாழன், 1 டிசம்பர் 2011 (16:24 IST)
பத்தி‌ரிகை என்றால் அச்சுப் பத்தி‌ரிகை அல்ல, இணைய பத்தி‌ரிகை.

இலக்கியவாதிகளை தொட்டுக் கொள்ள ஊறுகாயாகப் பயன்படுத்துவதில் கமலுக்கு அலாதி இன்பம். முழுமையான இலக்கிய படைப்பை இவ‌ரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. தனது கமர்ஷியல் கலைச் சேவைக்கு இலக்கியத்தை இலக்கியவாதிகளை பயன்படுத்திக் கொள்வார். அதனால் இவ‌ரின் ரசிகர்மன்ற பத்தி‌ரிகை அதற்கு சற்று மேலாக ஓரளவு இலக்கியத்தன்மையணுடன் இருக்கும்.

விரைவில் இணைய இதழ் ஒன்றை கமல் ஆரம்பிக்கப் போகிறார். அவ‌ரின் நின்று போன மய்யம் இதழ் பெய‌ரில் இதனை‌க் கொண்டு வரவுள்ளார். இந்தத் தகவலை சமீபத்தில் நடந்த பத்தி‌ரிகையாளர் சந்திப்பில் அவரே தெ‌ரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்