கத்திக்கு கோடை விடுமுறை

வெள்ளி, 2 மே 2014 (16:04 IST)
விஜய் நடிக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு ஒருவார காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோடை காரணமாக இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் தொடங்கியது முதல் சென்னை, ஹைதராபாத் என்று இடைவிடாமல் கத்தி படப்பிடிப்பு நடந்தது. தற்போது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா கார்டனில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
 
சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் ஒருவார காலம் விடுமுறை விடுவது என தீர்மானித்துள்ளனர். ஒருவார காலத்துக்குப் பின் இதே புஷ்பா கார்டனில் படப்பிடிப்பு மீண்டும் தொடர்ந்து நடக்கும்.
 
கத்திக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் வெளியாகிறது.
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்