இனி மலையாள சினிமாவில் கிசுகிசுக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. ப்ருத்விராஜ் ஏப்ரலில் திருமணம் செய்யும் முடிவிலிருக்கிறாராம்.
நந்தனம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ப்ருத்விராஜ் சந்தியா, பாவனா, ப்ரியாமணி என சேர்ந்து நடிக்கிற அனைத்து நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டவர். மறைந்த மலையாள நடிகர் சுகுமாரனின் மகன் இவர். கமலுக்குப் பிறகு அதிக நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் இவராகதான் இருப்பார். தமிழில் இன்னும் டேக் ஆஃப் ஆகவில்லையென்றாலும் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
இவர் மும்பை தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண்ணை காதலிப்பதாக மலையாளப் பத்திரிகைகள் எழுதி உள்ளன. வரும் ஏப்ரலில் ப்ருத்விராஜ் தனது காதலியை மணமுடிப்பார் என்றும் இந்த காதலுக்கு ப்ருத்வியின் அம்மா சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் அந்த செய்திகள் மேலும் கூறுகின்றன.