எஸ்.பி.ஜனநாதன் படம் - ஆர்யா, விஜய் சேதுபதி இணைகிறார்கள்

வியாழன், 22 ஆகஸ்ட் 2013 (11:16 IST)
FILE
எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி முதல்முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

பேராண்மை படத்துக்குப் பிறகு ஜனநாதன் இதுவரை எந்தப் படமும் தொடங்கவில்லை. கிணற்று வெள்ளத்தை ஆற்று வெள்ளமா இழுத்துப் போகும் என்கிற டைப். படம் எடுப்பதை திருப்தியாக நினைக்காமல் திருப்தி வருகிற மாதிரி படமெடுக்க வேண்டும் என்று நினைப்பவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு புறம்போக்கு என்ற படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார்.

பேராண்மையில் நடித்த ஜெயம் ரவியும், ஈ யில் நடித்த ஜீவாவும் புறம்போக்கில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த தகவல் வெளியாகி ஒரு வருடம் இருக்கும்.

FILE
இந்நிலையில் விரைவில் படத்தை தொடங்கப்போவதாகவும், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி, ஜீவாவுக்குப் பதில் ஆர்யா, விஜய் சேதுபதி நடிக்கிறார்கள். இருவருமே நடிக்க சம்மதம் தெரிவித்து கால்ஷீட் தந்திருக்கிறார்கள்.

ஹீரோயின் யார் என்பது முடிவாகவில்லை. இயற்கையிலிருந்து எஸ்.பி.ஜனநாதனுடன் கூட்டணி அமைத்து வரும் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம்தான் இதிலும். வி.டி.விஜயன் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

ஆர்யாவும், விஜய் சேதுபதியும் ஒன்றிணைவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்