எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா

செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (12:25 IST)
மனம் கொத்திப்பறவை, தேசிங்குராஜா படங்களின் மூலம் மீண்டும் சினிமாவில் தனக்கென்று ஓரிடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் எழில். இவர் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளனர்.
இது கிராமத்துப் பின்னணியில் தயாராகும் படம். விக்ரம் பிரபுவின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்க உள்ளார். இவர் இசைக்குழு வைத்து நடத்தி வருகிறவர். மகனுக்கு விருப்பம் ரியல் எஸ்டேட்டில். இருந்தும் தந்தைக்காக விக்ரம் பிரபு அவரது இசைக்குழுவில் இணைந்து மேடைகளில் பாடி வருகிறார். இந்நிலையில் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்ட ஸ்ரீதிவ்யாவை அவர் சந்திக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
சென்டிமெண்டாக படத்தின் முதல் காட்சியை தமிழ்ப்புத்தாண்டுக்கு படமாக்கினர். சிவாஜியின் அன்னை இல்லத்திலும் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர்.
 
விக்ரம் பிரபு சிகரம் தொடு படத்தை முடித்த பிறகு மே மாதமே முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்