லோக்சபா தேர்தலில் படுதோல்வியடைந்த விஜயகாந்த் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று 'உங்களுடன் நான்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். தொண்டர்களை சந்தித்துப் பேசும் நிகழ்ச்சிக்குதான் உங்களுடன் நான் என்று அவர் பெயர் வைத்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவா மீண்டும் சினிமாவில் நடியுங்க என்று தொண்டர்களின் குரல் கேட்கிறது.
சேலத்தில் நடந்த உங்களுடன் நான் நிகழ்ச்சியிலும் விஜயகாந்தை மீண்டும் சினிமாவில் நடிக்கும்படி கேட்டனர். அதற்குப் பதிலளித்த விஜயகாந்த், நான் சினிமாவில் நடிப்பதைவிட்டு பல வருடங்களாகிறது. இப்போது என் மகன் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். எனக்கு நீங்கள் ஆதரவளிப்பது போல் அவருக்கும் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.