கன்னடத்தில் பிஸியாக இருந்த நிகிதாவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நடிக்க தடை விதித்தது. காரணம்...? என்னுடைய கணவரை நிகிதா அபகரித்துக் கொண்டார் என்ற, நடிகர் தர்ஷனின் மனைவி அளித்த புகார். கன்னட திரையுலகில் புயலாக வீசிய இந்த சர்ச்சை இப்போது ஓரளவு தணிந்துள்ளது. மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நிகிதா.
இந்த நேரத்தில், தர்ஷனின் மனைவி தன்னை அடிக்க அடியாட்களை அனுப்பிய விவகாரத்தையெல்லாம் மீடியாவில் முன்வைத்துள்ளார். தர்ஷன் தன்னிடம் மன்னிப்பு கடிதம் தந்ததாகவும், அவருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நிகிதா கூறினார்.