ரமேஷ் அரவிந்த் இயக்கிவரும் இந்தப் படத்தில் கமலுடன் நாசர், ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், பார்வதி நாயர், ஊர்வசி ஆகியோரும் நடித்து வருகின்றனர். கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் போன்ற ஜாம்பவான்களும் படத்தில் உள்ளனர். வில்லுப் பாட்டும், கேரளாவின் பாரம்பரிய தெய்யம் கலையும் படத்தில் பிரதானமாக வருகிறது. இந்த இரு கலைகளிலும் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளை வைத்து பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஜிப்ரான். கமல் வாங்கி வந்த சரித்திரக்கால இசைக்கருவிகளையும் இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளார்.