நண்பேன்டா படத்துக்கு தந்த 40 லட்சம் அட்வான்ஸை உதயநிதி திருப்பி கேட்டதற்கு, முடியாது என நடிகை காஜல் அகர்வால் மறுத்துவிட்டார். அந்தப் பணத்தை வாங்கித் தரும்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உதயநிதி புகார் செய்தார்.
நண்பேன்டா படத்துக்கு காஜல் அகர்வால் 40 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியிருந்ததாகவும், திடீரென நயன்தாராவை ஒப்பந்தம் செய்ததால் அந்த 40 நாள் கால்ஷீட்டும் வீணாகிவிட்டதாகவும், அதனால் 40 லட்சத்தை திருப்பித்தர முடியாது எனவும் காஜல் தரப்பு கறார் காட்டுகிறது.