உதயநிதி புகார் - விளக்கம் கேட்டு காஜலுக்கு கடிதம்

வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (18:00 IST)
நண்பேன்டா படத்துக்கு தந்த 40 லட்சம் அட்வான்ஸை உதயநிதி திருப்பி கேட்டதற்கு, முடியாது என நடிகை காஜல் அகர்வால் மறுத்துவிட்டார். அந்தப் பணத்தை வாங்கித் தரும்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உதயநிதி புகார் செய்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் காஜல் அகர்வாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
 
நண்பேன்டா படத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் சம்பளத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு நாற்பது லட்சங்கள் அட்வான்சாக தரப்பட்டது. இந்நிலையில் அவரை நீக்கிவிட்டு நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். காஜல் படத்தில் நடிக்காததால் அவரிடம் அட்வான்ஸை திருப்பி கேட்டார் உதயநிதி.
 
நண்பேன்டா படத்துக்கு காஜல் அகர்வால் 40 நாள்கள் கால்ஷீட் ஒதுக்கியிருந்ததாகவும், திடீரென நயன்தாராவை ஒப்பந்தம் செய்ததால் அந்த 40 நாள் கால்ஷீட்டும் வீணாகிவிட்டதாகவும், அதனால் 40 லட்சத்தை திருப்பித்தர முடியாது எனவும் காஜல் தரப்பு கறார் காட்டுகிறது.
 
விளக்க கடிதம் அனுப்பப்பட்டிருப்பதை தொடர்ந்து பஞ்சாயத்து களைகட்டியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்