களஞ்சியம், என்னுடைய படத்தில் அஞ்சலி நடித்த பிறகே வேறு படங்களில் அவர் நடிக்க வேண்டும் என குடைச்சல் கொடுத்து வருவதால் ஜெயம் ரவி படத்தில் அஞ்சலியை நடிக்க வைப்பார்களா என்ற கேள்வி இருந்தது. அதற்கு உறுதியான பதிலை தந்துள்ளார் சுராஜ்.
தலைநகரம், மலைக்கோட்டை என்று லாபம் சம்பாதித்து தந்த படங்களின் இயக்குனரான சுராஜ் சமீபமாக அந்த நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார். அதிலும் கடைசியாக அவர் இயக்கிய அலெக்ஸ்பாண்டியன் சுராஜ் மீதான நம்பிக்கையை துடைத்தெறிந்தது. சேர்ந்து படம் செய்யலாம் என்று வாக்கு தந்திருந்த பல நடிகர்களும் சுராஜை கண்டு பதுங்க ஆரம்பித்தனர். அதில் முக்கியமானவர்கள் தனுஷ், கார்த்தி.