இன்னும் நடிகர்களை முடிவு செய்யவில்லை

வியாழன், 19 ஜூன் 2014 (11:30 IST)
மணிரத்னம் இயக்கும் மும்மொழி படத்தில் மகேஷ் பாபு, நாகார்ஜுன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பதாக செய்திகள் வெளியானது. நாகார்ஜுன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அதனை ஆமோதித்தனர். மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினியும் இவர்கள் நடிப்பதை கேரளாவில் வைத்து உறுதி செய்திருந்தார்.
 
இந்நிலையில், ஸ்கிரிப்ட் முழுமையாக முடிந்த பிறகே நடிகர்கள் தேர்வு என்று கூறியுள்ளார் மணிரத்னம்.
 
மணிரத்னத்தின் சமீபகால படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. கடைசியாக வெளியான கடல், ராவணன் படங்கள் மோசமான தோல்வியை தழுவின. அதன் காரணமாக புதிய ஸ்கிரிப்டை வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் எடுத்து எழுதி வருகிறார் மணிரத்னம். ஸ்கிரிப்ட் பணிகள் இன்னும் முடியவில்லை.
 
லடாக்கில் இந்த மாதம் நடக்கும் மூன்றாவது சர்வதேச திரைப்பட விழாவில் மணிரத்னம் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர் தனது அடுத்தப் படம் குறித்தும் பேசினார். ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையாக முடிந்த பிறகே நடிகர்கள் தேர்வு என்று அவர் பேட்டியின் போது தெரிவித்தார். 
 
அவர் அப்படி கூறியிருந்தாலும் மகேஷ் பாபு, நாகார்ஜுன், ஐஸ்வர்யா ராய் மூவரும் படத்தில் கண்டிப்பாக இடம்பெறுவார்கள் என மணிரத்னத்தின் அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்