நடிகைகளுக்கு இந்திப் படத்தில் நடிப்பது பெருங்கனவாக இருப்பது போல் சில இயக்குனர்களுக்கும் இந்தியில் படம் செய்வது வாழ்நாள் கனவு. கௌதம் அதனை சாதித்துவிட்டார். பிரபுதேவாவும், முருகதாஸும் அந்த கனவில் வெற்றிக் கொடியை பறக்கவிட்டுள்ளனர். செல்வராகவனுக்கும், விஷ்ணுவர்தனுக்கும் அது இன்னும் கனவாகவே உள்ளது.
தற்போது ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் யட்சன் படத்தை இயக்கி வருகிறவர் இந்தியின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. யட்சனுக்கு அடுத்து அவர் இயக்கப் போவது இந்திப் படமே என உறுதியாக கூறுகின்றனர். அது ஆரம்பம் படத்தின் ரீமேக்கா இல்லை புதிய ஸ்கிரிப்டா என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை.