குல்சாரை பாடலாசிரியர் என்ற வரையறைக்குள் அடக்குவது சரியாகாது. குல்சார் கவிஞர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என பன்முக திறமை வாய்ந்தவர். தான் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் சிறந்த பங்களிப்பை செலுத்தியவர்.
ஆர்.டி.பர்மன், சலீல் சௌத்ரி, ஏ.ஆர்.ரஹ்மான் என்று அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவின் முக்கிய இசையமைப்பாளர்கள் பலருடன் பணிபுரிந்துள்ளார். பத்மபூஷண், சாகித்ய அகாதமி உள்பட ஏராளமான விருதுகளையும் வாங்கியுள்ளார்.