கடற்கரைச் சாலையில் காரில் செல்லும் த்ரிஷாவை ஒரு கும்பல் வழி மறிக்கிறது. என்ன ஏது என்று சுதாகரிப்பதற்குள் அவரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடிவிடுகிறது அந்த மர்மக் கும்பல். த்ரிஷா ஏன் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவர்கள் யார், என்ன காரணம்?
கொலையை அஜீத்தும், அனுஷ்காவும் இணைந்து துப்பறிகிறார்கள். அதில் த்ரிஷா குறித்த விஷயங்களை கண்டுபிடிக்கிறார்கள். அவர் கொலை செய்யப்பட்டதுக்கான காரணம் தெரிய வருகிறது. அதற்குப் பின்னால் சில பெரிய புள்ளிகள் இருப்பதையும் கண்டு பிடிக்கிறார்கள்.