படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே, கடைசி முப்பது நிமிடங்கள் குலுங்கி அழுதாராம் நயன்தாரா. படம் முடிந்த பிறகும் அவரால் அழுகையை அடக்க முடியவில்லையாம். வீட்டிற்கு சென்ற பிறகும் படத்தை நினைத்து அழுதாராம். ஐந்து தினங்களுக்குப் பிறகு அழுகையுடன்தான் ஜீவா சங்கரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருக்கிறார். அந்த அளவுக்கு படம் நயன்தாராவை உணர்ச்சியில் பிழிந்தெடுத்திருக்கிறது.
இன்டஸ்ட்ரியில் இந்த அமரகாவியம் குறித்து நிலவும் கருத்தை சொல்லாமல் இந்த செய்தி முற்றுப் பெறாது. 2006 -இல் வெளியான இரு கொரிய படங்களின் தழுவல் அமரகாவியம் என்ற பேச்சு உள்ளது. ஒன்று, ஏ மில்லியனர்ஸ் பர்ஸ்ட் லவ், இன்னொன்று ஒன்ஸ் இன் ஏ சம்மர்.