ஆரம்பமானது பாலாவின் புரொடக்சன் நெ.5 - அதர்வா ஹீரோ

செவ்வாய், 15 ஜூலை 2014 (18:21 IST)
பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அதர்வா ஹீரோவாக நடிக்கும் படம் சென்னையில் தொடங்கியது.
 
பரதேசியில் பாலாவின் இயக்கத்தில் நடித்த அதர்வா தற்போது பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். படத்தை இயக்குவது சற்குணம். இதன் தொடக்கவிழா சென்னையில் நடந்தது.
களவாணி, வாகை சூட வா படங்கள் சற்குணத்துக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. ஆனால் அதன் பிறகு அவர் தனுஷை வைத்து இயக்கிய நய்யாண்டி அந்த பெயரை காலி செய்தது. அடுத்தப் படத்தை வெற்றியாக்கினால் மட்டுமே சற்குணத்தால் பெயரை மீட்டெடுக்க முடியும் என்ற நிலை.
 
இந்நிலையில் சற்குணத்தின் படத்தை தயாரிக்க பாலா முன்வந்தார். குறைவான பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நேற்று நடந்த பூஜையிலும் கிளாப் போர்டில் படத்தின் பெயருக்குப் பதில் புரொடக்ஷன் நெ.5 என்றே எழுதப்பட்டிருந்தது.
 
பூஜையில் பாலா, சற்குணம், அதர்வா, சசிகுமார் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்